வாதம் என்பது ரயில் தண்டவாளம் போல் இரண்டும் இணையாது, ஆனால் தண்டவாளத்தில் ரயில் போய்க்கொண்டே இருக்கும். அதுபோல் வாதங்கள் நீண்டுகொண்டே போகும். அதில் அவரவர்களுடைய கருத்துக்கள் பயணிக்கும்.
கலிலியோ -உலகம் உருண்டை என்று தன் அறிவினால் உணர்ந்து அறிவித்தார். அவர் கருத்தை அப்போது ஏற்கவில்லை. துரத்தினார்கள், அவர் கருத்துக்கு மரணத்தை பரிசாக அளித்தார்கள்.
சானக்கியன்- இளைஞர்கள் மன வளர்ச்சிக்கு அழித்த தத்துவங்களை தான் முதியவர்கள் ஏற்ற்றார்களா? முடிவு மரணம்.
இப்படி எக்கருத்துக்களையும் ஏற்கும் மனோபாவம் ஏன் இல்லை, நம் மக்களுக்கு கருத்துக்களை எற்பதினால்தான் இழப்பு ஏதும் உண்டா? தன்மானத்தை இழப்பதாக கருதி அவர்கள் ஆண்மை பலத்தினை இழக்கிறார்கள். அறிஞர்களின் அறிவை தூண்டுவதற்கு பதில் அவர்களின் மனதை துண்டு துண்டு துண்டாக்குகிறார்கள். முளையிலேயே எத்தனை ஆண்மை அறிஞர்கள் இவர்களின் செயல்கலினால் மனம் வருந்தி மன அழுத்தத்தினால் வெதம்பி நோய்க்கு ஆளாக்கப்படுகிறார்கள்? இளம் வயதிலேயே மாண்டார்கள். விவேகானந்தர் மரணமும் அப்படித்தானே நோய்க்கு மருந்து உண்ணாமல் விரக்தியின் விளிம்பில் இருந்து வீழுந்து விட்டானே. எக்கருத்தையும் ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் நம் மனம் தானே கேட்ட கருத்தை உள்வாங்கி வைத்துக்கொண்டு பல கோணங்களில் ஆராய்ந்து நமக்கு உகந்தவை என்று உணர்ந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்போகிறோம். எதற்கு கருத்துக்களை முழுமையாக அறிவதற்கு முன்னரே அவர்களிடம் வாதம் புரிய வேண்டும்! அவர்களின் எண்ண ஓட்டத்திற்கு தடைக்கல்லாகி அவர்கள் மனதை புண்படுத்த வேண்டும்! சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழியை உற்று நோக்கினால் அதன் தன்மையினை உணரலாம்.
ஏதோ விருந்தில் உணவு உண்டபின் உணவு துறைக்குள் நம் பற்களின் இடையில் சிக்கி அதை நம் பல்லினால் நெருடியும் எடுக்கப்பட்டு துணுக்குகள் வராமல் அடம் பிடிக்கும் போது, வேறு எந்த என்னத்திற்கும் தடைபடாமல் படும் அவஸ்தையை நாம் எப்பொழுதும் அனுபவித்திருப்போம். அப்போது ஏதாவது சிறு துரும்பும் பல்குத்த ஏதுவாக நம் கையில் கிடைக்கும் போது ஏற்படும் உணர்சிகளை எண்ணிப்பாருங்கள் இப்பழமொழியின் தன்மையை உணரலாம் அப்படி ஏதாவது ஒரு சமயத்தில் இக்கருத்துக்கள் நமக்கு உதவலாம் இல்லையா? நம் கடந்த வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்களில் நம் மனதிற்கு ஏற்புடையாமல் வெறுத்து பின் அதன் ஆழத்தை உணர்ந்த அனுபவம் நம்மில் பலருக்கு உண்டு. என்ன நாம் செய்ய போவது, எல்லாம் நம்மை நாடி வரும் கருத்துக்களை பொறுமையாக சில கணம் கேட்பது மட்டும் தானே என்று நினைத்தால் வாதத்திற்கு இடமேது!
"விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவது கிடையாது கெட்டுப் போனவர்கள் விட்டுக் கொடுப்பது கிடையாது"
சகித்துக் கொள்ளும் மனநிலை வேண்டும் சக மனிதர்களையும், பிற கருத்துகளையும்...
ReplyDeleteஅருமை உண்மை
Delete