Monday, March 23, 2020

கானல் நீர் போல காரிகை (பெண்)

"காளையின் கண்களுக்கு காரிகைகள் கானல் நீர்!"
"கண்டு கொள்ள வேண்டி இடைவிடா தொடர் ஓட்டம்!"
"ஓட்டத்தின் ஊடே காணும் பல மேன்மைகளை ஒதுக்கிவிடாமல் உட்படுத்தி காட்டு உன் கனவுகளை!" "இயற்கையில் கண்கவர் காரி கைகளும் உண்டு, 
இறைவன் படைப்பின் பண்பியல் இது."
கனவுகளை நினைவாக்கி நிலைத்து காட்டு உன் வாழ்வில்"
 "களைத்துப் போகையில் காரிகையின் இரு விழிகள் உன்னை கவரும், இயற்கையில் ஒன்றான தென்றல் போல".
"காண்பதை எல்லாம் உனக்கு சொந்தமாக நினைக்காதே 
பந்தம் ஆக்கிக்கொள் உன் உயரிய பண்புகளால்".
" உனக்கென்று ஒருவள் இவ்வையகத்தில் காத்திருப்பாள்.
உவகையுடன் ஏற்றுக்கொள் காலம் கைகூடும் போது!"
"இறைவன் படைப்பின் இனியவள் அவள், 
இயல்பாக அவள் நம் கண்களை கவரதான் செய்வாள். 
"வெற்றிக்கு நீ சிந்தும் வேர்வை துளிகளை ஒற்றிவிடும் தென்றல் போல் அவள் அழகு.
"காசுக்கு  வாங்கும் பொருளின் மேல் வஞ்சியர் உருவம் வண்ணம்  தூவிய குரோட்டன்ஸ் இலை போல்."
"கண்டு ரசிக்க மட்டுமே கடவுளின் படைப்பில் பெண்மை." 
கருமையை பூசிடாதே உன் கற்பனை தீயில். 
"காரிகைக்கு மட்டும் தான் கற்பு நெறி என்று எண்ணாதே, 
கட்டிளம் காளையே உனக்கு தான் அது பொருந்தும்."
"கற்புநெறி தவறாதார்  கந்தர்வர்கள் ஆனார்கள்!" 
"கற்புநெறி தவறியவர்கள் காமுகர் ஆனார்கள்!"
                                                  சு. கி. சாமி 

1 comment:

  1. "காண்பதை எல்லாம் உனக்கு சொந்தமாக நினைக்காதே
    அருமை

    ReplyDelete