Friday, September 1, 2023

தேங்காய் இல்லாமல் பூமி இல்லை


                            தேங்காய் இல்லாமல் கண்டங்கள் இல்லை

மணல் திட்டுகளை கரையாமல் கண்டங்கள் ஆக்க கடற்கரை   ஓரங்களில் பாதுகாக்க தலை நிமிர்ந்த தென்னைக்கு தலைவணங்கி நன்றி தெரிவிக்கிறோம்
 அன்பானவர்களை அழகாக அலங்கரிக்க தோன்றும் அதுபோல தேங்காய் ஓட்டில் என் சிந்தை பதித்து செய்த சிற்பங்களை காணுங்கள்.

Wednesday, December 29, 2021

ப்ரா(ண)சக்தி பஞ்சாபூதம் (பஞ்சக்க்ஷரம் )

இப்பிரபஞ்சம் ஆகிய பிராண சக்தியின் பஞ்சபூதங்கலாலும் நிறைந்த இந்த அண்டத்தின் கோள்கள் (கிரகங்கள்)தங்கள் ஈர்ப்பும் சில உந்துதலுமாக சுழற்ச்சியில் இயங்குவதும் இயற்கைக்கு ஊறாக செயற்கை கோள்களின் வலைதள அலைகள் நம்மை மனோரீதியாக அலைக்கழிக்க சித்தம் தடுமாறுவதை உணரத்தான் வேண்டும், தற்கால சூழ்நிலையில் மனிதன் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதை உணர்ந்தால் யோக நெறிமுறைகளில் ஆர்வத்தை செலுத்தலாம் 🙏. 

Monday, December 6, 2021

சித்த-யோகம்

சித்தயோகா -  சிந்தித்து செயல்படுத்தக்கூடிய யோகாஅப்யாஸம், ஒரு
நாணயத்திற்கு எப்படி இருபக்கங்கள் உள்ளதோ அதேபோல் ஒரு செயலுக்கு இரு 
அணுகுமுறைகள் உள்ளது. அவைகளை பலகோணங்களில் சிந்தித்து ஆராய்ந்து நமக்கு உகந்தவைகளை தேர்ந்தெடுக்கும் முயற்சி. ஒரே செயலில்
பல வேலைகளை சாதிக்க வேண்டிய எண்ணங்கள். அதற்கு ஏற்ப யுக்திகளை
கையாளும் விதம் பிராணயாமம் செய்யும் போதே தியானமும் தியானத்துடன்
கூடிய யோகாசனமும், யோகாசனத்துடன் கூடிய ப்ராணயாமம், மன உற்சாகம்
உணரும் தன்மைகளை பெருக்கி கொள்ளுதல். (உ.ம்) பலர் கூடி
அமர்ந்திருக்கும் போது சுகந்த மலர் வாசனையை ஒருவர் அறிந்து சொல்ல மற்றவர்கள் அதை பின் உணர்ந்து, ஆமோதித்தல் என்ற அனுபவம் நம்மில் பலருக்கு உண்டு.

 செயல்திறனின் மேம்பட்ட சிந்தனைக்கு ஒரு உவமை கதை-

"அணிலின் முதுகினில் மூன்று கோடுகள் உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.
அதற்கு. நம் முன்னோர்கள் கூறும்கதை கம்பராமாயணத்தில் கம்பர் வர்ணித்ததுபோல் திருராமபிரான் இலங்கைக்கு பாலம் அமைக்கும் பணிகளில்
பல வானரப் படைகள் தங்களால் முடிந்த பாறைகளை சுமந்து சென்று கடலில் பாலம் கட்டும் பணியில் ராமபிரான் மேற் கொண்டுள்ள பக்தியினால் உதவி
செய்யும் நோக்கில் தன் உடலினை கடல் நீரில் நனைத்து பின் கரை மணலில் உருண்டு தன் உடலில் உள்ள மணலை பாலம் கட்டும் இடத்தில் உதிர்த்துவிட்டு
வருமாம். இவ்வாறு செய்வதை அறிந்த இராமபிரான் அந்த அணிலை அன்பாகதடவி கொடுத்ததினால் அக்கோடுகள் அமைந்தன என்றார்கள். சித்த
அப்யாசத்தில் இக்கதைக்கு எவ்வாறு சிறப்பூட்டலாம் என்றால், அணில் மேற்கூறியது போல் தன் உடலில் உள்ள மணலை உதிர்த்துவிட்டு வருகையில்
நாம் உண்மையிலேயே ராமபிரானுக்கு உதவி செய்கிறோமா? இந்த சிறுதுளி
மணலினால் பாலம் கட்டும் பணியில் எந்த பலனும் இல்லை. வேறு எவ்வாறு
இப்பணியில் நம்மை ஈடுபடுத்தி செயல்பாட்டினை மேம்படுத்தலாம் என்று சிந்தித்தது. அப்போது அருகில் சில சிறுவர்கள் தான் கொறித்து கீழே போட்ட
கொய்யாபழத்திற்காக போட்டி போடுவதை கண்டது. இச்சிறுவர்கள்
இப்பழத்திற்கு இப்படி போட்டி போடுகிறார்களே! என்று அருகில் உள்ள வானரத்திடம் கேட்டதற்கு அந்த வானரமும் உனக்கு இராமபிரான் அளித்த
சிறப்பு இதுதான் உனக்கு ருசியான பழங்களை வெகு விரைவில் அறியும் சிறப்பை இறைவன் அருளியுள்ளார் என்று வானரங்கள் கூறியது. அணிலும்
இறைவன் அருளிய சிறப்பை கண்டு வியந்தது. ஆனால் இச்சிறப்பு எப்படி
பாலம் கட்ட பயன்படும் என்று யோசித்து ஏன் இப்படி செய்தால் என்ன? நான்
சில வானரங்களை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள வனபகுதிக்குச் சென்று
ராமா நாமாவையும் சொல்லிக்கொண்டே வேகமாக ருசியான பழங்களை தன்
சக்தியினால் கண்டுணர்ந்து கொய்து போட அதை சில வானரங்கள் கொண்டுவந்து கடும் பணியில் ஈடுபட்டிருந்த வானரங்களிடம் கொடுக்க
அதை விரும்பி உண்ண மற்ற வானரங்களின் களைப்பு நீங்கி மிக உற்சாகவும் வேகமாகவும் பாலம் கட்டி முடிக்கப்பட்டதை ராமபிரான் கண்டு வியப்படைந்து அணிலை அருகினில் அழைத்து இப்பெரும் பணிக்கு சிறிய
விலங்கான நீ எவ்வளவு முதன்மையாக இருந்திருக்கிறாய் என்று அகம் மகிழ்ந்து வருடிக்கொடுத்த கோடுகள்தான் அவை. ஆக இப்படி மேம்பட்ட
சிந்தனையின் பொருட்டு நம் பணிகளின் திறன் பல மடங்குகள் கூடும் என்பதில்
ஐயமில்லை. சித்த அப்யாஸனத்தில் ஓர் ஆன்ம சிந்தனை. நம் உடல் வேறு
என்பதற்கு ஒரு பௌதீக உதாரணம். நம் உடல் ஆனது. எலும்பு சதைகளினால்
ஆன ஒரு இயந்திரம் என்று வைத்துக் கொண்டால் உயிர் என்பது அந்த
இயந்திரத்தை இயக்க மின்சக்தி போன்ற பிராணசக்தி தேவை. மோட்டார் ஆனது 160 Volt முதல் 290Volt வரை இயங்கும் தன்மை உள்ளது. ஆனால்
மின் சக்திக்கு ஒப்ப அதன் வேகமும் மாறுபடும். ஆனால் இந்த உடல்
24ம் யக்மோ 220 Volt முதல்240 Volt வரை வேக மாறுபாடுகளுக்கு ஒப்பதான் சீராக
இயங்கும் தன்மையாக உள்ளது. ஆகையால் மோட்டார் போன்ற உயிர் இயங்க
சரியாக கட்டுப்படுத்தப்பட்ட (Stabilized) மின்சக்தியான பிராண சக்த்தியை சரிவர பிரயோகம் செய்வதின் மூலம் மட்டுமே உடல் ஆன இயந்திரம் நோய்
என்ற இடர்பாடுகளில் இருந்து தப்பித்து சரிவர இயங்க செய்வதுதான்
யோகமுறை. பிராணசக்தி திறனை உயிர் உணர்ந்து உடலை இயங்கச்
செய்வதின் மூலம் சித்தம் தெளிவடைந்து மனம் அமைதியை உணர வைப்பதுதான் சித்தயோக அப்யாஸம். எவ்வாறு இயந்திரம் பழுதடைந்த உடன்
மோட்டாரை தக்க வேறு இடத்தில் பொறுத்தி, அந்த உயிர் அற்ற உடலில் இருந்து பிரிந்த ஆத்மா என்கிற உயிர் வேற உடலுடன் இணைக்கப்படுகிறது.
இயற்கையை அழிக்கவோ, ஆக்கவோ மனிதனால் முடியாது. ஒரு பாத்திரத்தின் நீர் சிந்திவிட்டால் அது ஆவி ஆகி மறபடி மழை நீராகி நமக்கு கிடைக்கிறது.
ஒரு மரத்தில் இலை உதிர்ந்து தழை உரமாகி மறுபடி மரமாக வளர்கிறது.
காற்றானது மின் விசிறியால் இடம்மட்டுமே மாற்றப்படுகிறது. இதேபோல்
அனைத்தும் சுழற்சியின் முறையிலேயே நடைபெறுகிறது போல் உயிராகிய
ஆன்மாவும் சுழற்சியின் முறையில் மறு ஜென்மம் பெறுகிறது. மறுபடி ஜனனம்
மறுபடி மரணம், மறுபடி தாயின் வயிரே சரணம்" என்று ஆதி சங்கர்
கூறியது போல் மறுபடி சிறப்பான புனிதத்தாயின் வயிற்றில் சரணம் அடைய
வேண்டும் என்றால், இந்த ஜென்மாவில் புனிதத் திணையை யோக அப்யாஸம்
மூலமாக விதைத்தால் மட்டுமே மறு ஜென்மம் என்ற சொர்க்கமான திணையை
அறுவடை செய்ய முடியும். மேலும் மழை பெய்கிறது நாம் நனையாமல் குடை
பிடித்து சித்த சாதுர்யத்தால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சௌகர்யமாகச்
செல்கிறோமே அதேபோல்தான் ஜீவ ஆத்மாவும் சித்தயோக சாதுர்யத்தால்
மறு ஜென்மம் சுகமாக அமைந்தால் சொர்க்கமாக மாற்றி அமைத்தும் கொள்ள
முடியும்.

Monday, March 23, 2020

கானல் நீர் போல காரிகை (பெண்)

"காளையின் கண்களுக்கு காரிகைகள் கானல் நீர்!"
"கண்டு கொள்ள வேண்டி இடைவிடா தொடர் ஓட்டம்!"
"ஓட்டத்தின் ஊடே காணும் பல மேன்மைகளை ஒதுக்கிவிடாமல் உட்படுத்தி காட்டு உன் கனவுகளை!" "இயற்கையில் கண்கவர் காரி கைகளும் உண்டு, 
இறைவன் படைப்பின் பண்பியல் இது."
கனவுகளை நினைவாக்கி நிலைத்து காட்டு உன் வாழ்வில்"
 "களைத்துப் போகையில் காரிகையின் இரு விழிகள் உன்னை கவரும், இயற்கையில் ஒன்றான தென்றல் போல".
"காண்பதை எல்லாம் உனக்கு சொந்தமாக நினைக்காதே 
பந்தம் ஆக்கிக்கொள் உன் உயரிய பண்புகளால்".
" உனக்கென்று ஒருவள் இவ்வையகத்தில் காத்திருப்பாள்.
உவகையுடன் ஏற்றுக்கொள் காலம் கைகூடும் போது!"
"இறைவன் படைப்பின் இனியவள் அவள், 
இயல்பாக அவள் நம் கண்களை கவரதான் செய்வாள். 
"வெற்றிக்கு நீ சிந்தும் வேர்வை துளிகளை ஒற்றிவிடும் தென்றல் போல் அவள் அழகு.
"காசுக்கு  வாங்கும் பொருளின் மேல் வஞ்சியர் உருவம் வண்ணம்  தூவிய குரோட்டன்ஸ் இலை போல்."
"கண்டு ரசிக்க மட்டுமே கடவுளின் படைப்பில் பெண்மை." 
கருமையை பூசிடாதே உன் கற்பனை தீயில். 
"காரிகைக்கு மட்டும் தான் கற்பு நெறி என்று எண்ணாதே, 
கட்டிளம் காளையே உனக்கு தான் அது பொருந்தும்."
"கற்புநெறி தவறாதார்  கந்தர்வர்கள் ஆனார்கள்!" 
"கற்புநெறி தவறியவர்கள் காமுகர் ஆனார்கள்!"
                                                  சு. கி. சாமி 

Thursday, March 19, 2020

வாதம்

எவன் ஒருவன் மற்றொருவனை வாதத்தினால் வென்றுவிடுகிறானோ, அவனிடம் அன்பை இழக்கிறான்.
வாதம் என்பது ரயில் தண்டவாளம் போல் இரண்டும் இணையாது, ஆனால் தண்டவாளத்தில் ரயில் போய்க்கொண்டே இருக்கும். அதுபோல் வாதங்கள் நீண்டுகொண்டே போகும். அதில் அவரவர்களுடைய கருத்துக்கள் பயணிக்கும்.
கலிலியோ -உலகம் உருண்டை என்று தன் அறிவினால் உணர்ந்து அறிவித்தார். அவர் கருத்தை அப்போது ஏற்கவில்லை. துரத்தினார்கள்,  அவர் கருத்துக்கு மரணத்தை பரிசாக அளித்தார்கள்.
சானக்கியன்- இளைஞர்கள் மன வளர்ச்சிக்கு அழித்த தத்துவங்களை தான் முதியவர்கள் ஏற்ற்றார்களா?  முடிவு மரணம். 
இப்படி எக்கருத்துக்களையும்  ஏற்கும் மனோபாவம் ஏன் இல்லை,  நம் மக்களுக்கு கருத்துக்களை எற்பதினால்தான் இழப்பு ஏதும் உண்டா? தன்மானத்தை இழப்பதாக கருதி அவர்கள் ஆண்மை பலத்தினை இழக்கிறார்கள். அறிஞர்களின் அறிவை தூண்டுவதற்கு பதில் அவர்களின் மனதை துண்டு துண்டு  துண்டாக்குகிறார்கள். முளையிலேயே எத்தனை ஆண்மை அறிஞர்கள் இவர்களின் செயல்கலினால்  மனம் வருந்தி மன அழுத்தத்தினால் வெதம்பி நோய்க்கு ஆளாக்கப்படுகிறார்கள்?  இளம் வயதிலேயே மாண்டார்கள். விவேகானந்தர் மரணமும் அப்படித்தானே நோய்க்கு மருந்து உண்ணாமல் விரக்தியின் விளிம்பில் இருந்து வீழுந்து விட்டானே. எக்கருத்தையும் ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் நம் மனம் தானே கேட்ட  கருத்தை உள்வாங்கி வைத்துக்கொண்டு பல கோணங்களில் ஆராய்ந்து நமக்கு உகந்தவை என்று உணர்ந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்போகிறோம். எதற்கு கருத்துக்களை முழுமையாக அறிவதற்கு முன்னரே அவர்களிடம் வாதம் புரிய வேண்டும்! அவர்களின் எண்ண ஓட்டத்திற்கு தடைக்கல்லாகி  அவர்கள் மனதை புண்படுத்த  வேண்டும்! சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழியை உற்று நோக்கினால் அதன் தன்மையினை உணரலாம். 
ஏதோ விருந்தில் உணவு உண்டபின் உணவு துறைக்குள் நம் பற்களின் இடையில் சிக்கி அதை நம் பல்லினால் நெருடியும் எடுக்கப்பட்டு துணுக்குகள் வராமல் அடம் பிடிக்கும் போது, வேறு எந்த என்னத்திற்கும் தடைபடாமல் படும் அவஸ்தையை நாம் எப்பொழுதும் அனுபவித்திருப்போம். அப்போது ஏதாவது சிறு துரும்பும் பல்குத்த ஏதுவாக நம் கையில் கிடைக்கும் போது ஏற்படும் உணர்சிகளை எண்ணிப்பாருங்கள் இப்பழமொழியின் தன்மையை உணரலாம் அப்படி ஏதாவது ஒரு சமயத்தில் இக்கருத்துக்கள் நமக்கு உதவலாம் இல்லையா? நம் கடந்த வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்களில் நம் மனதிற்கு ஏற்புடையாமல் வெறுத்து பின் அதன் ஆழத்தை உணர்ந்த அனுபவம் நம்மில் பலருக்கு உண்டு. என்ன நாம் செய்ய  போவது,  எல்லாம் நம்மை நாடி வரும் கருத்துக்களை பொறுமையாக சில கணம் கேட்பது மட்டும் தானே என்று நினைத்தால் வாதத்திற்கு இடமேது!
"விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவது கிடையாது கெட்டுப் போனவர்கள் விட்டுக் கொடுப்பது கிடையாது"

யோகா (மூச்சு பயிற்சியுடன் )

இனி மூட்டுவலியா மூச்........
 குப்புறப் படுத்துக்கொண்டு தலையை மார்பில் இருந்து மேலே நோக்கி வளைத்து இரண்டு உள்ளங்கைகளிலும் முகத்தின் தாடை அண்டை கொடுத்து நன்றாக மூச்சை உள்ளிழுத்து மிக நிதானமாக வெளிவிட்டுக் கொண்டே காலை மேல் நோக்கி முடியும் வரை நன்றாக மடக்கி பின்பு கீழ்நோக்கி காலை நீட்டவு ம்  பின்பு வலது காலை முடியும் வரை மேல் நோக்கி மடக்கி நீட்டவும் இப்படி மாறி மாறி பத்து இருபது முறை ஓய்வு நேரங்களிலோ அல்லது காலை படுக்கையில் இருந்து எழும் போதும் பின்பு இரவு படுக்கும் முன்பும் செய்து பழகினால் கால் மூட்டுகளுக்கு நல்ல பயிற்சியாக அமையும்.

Friday, February 7, 2020

சாமி( சாம்பல் கோட்டின் மீது)

விபூதி யோகம்:

சாமானியனின் பார்வையில் ஒருவேளை சாம்பல் தான் விபூதி யோகம் ஆயின்,  கருமையும் வெண்மையும் கலந்து உள்ளதால் தெய்வீக குறியீடாக நாம் தரித்துக் கொள்கிறோமோ?  கருமை வெண்மை (மேன்மை, கீழ்மை) இல்லாதவர் எவர். ஒருவேளை மேன் மக்களில் கூட சிறிதளவு கருமை உள்ளதோ? தங்க அணிகலன் கூட சிறிது செம்பு கலப்படமாக இருந்தாலும் ஜொலிக்கிறதே ! டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் கூட இம்முறை தோபிங் எனக் கூறுவர். விபூதி யோகத்தின் மேன்மையை " விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை கெட்டுப் போனவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை"இதில் முதல் வாக்கியம் மேன்மை சிந்தனையிலும், இரண்டாம் வாக்கியம் கீழ்மை சிந்தனையிலும் அமைந்துள்ளது. விட்டும் கொடுக்க வேண்டாம் கெட்டும் போக வேண்டாம். நம் ஆராய்ச்சி மூன்றாம் கண்ணுடையதாக அமைந்தால் அதில் சில அடிப்படை சம்பவங்களை வைத்து யோசிக்கலாம். 
என் சிறுவயதில் காப்பியில் 2 ஸ்பூன் சீனி போட்டு கொடுப்பார்கள். போதாது மேலும் வேண்டும் என்று அடம் பிடித்தேன். வாலிபம் கடந்தும் தொடர்ந்தது இந்நிலை. சூழ்நிலை காரணமாக சீனி தட்டுப்பாடு. அன்று காலை 2 ஸ்பூன் மட்டுமே போட்டு சாப்பிடும் போது ருசியில் மாற்றம் ஏதும் உணர  முடியவில்லை. அதற்கு ஏற்றார் போல் என் அம்மாவும் சித்தியும் அவர்கள் முன்பு தயாரித்த கேசரியில் ஒரு ஆழாக்கு ரவைக்கு இரண்டு ஆழாக்கு என்றும் மற்றொருவர் இரண்டு என்றும் இரண்டரை என்றும் 25 சதவீத வேறுபாட்டை குறித்து தர்க்கம். அவர்கள் தயாரித்த கேசரியை நானும் கூட ருசித்துள்ளேன் எந்த மாற்றமும் இல்லை வேறு ஒரு முறை நானே கேசரி தயாரிக்க முற்படும் போது ஒரு ஆழாக்கு ரவைக்கு ஒன்றே முக்கால் ஆழாக்கு மட்டுமே சீனி சேர்த்தேன் நாக்கின் ருசி ஓரளவுக்கு மேல் உணராது என்பதால் சூப்பர் என்ற பட்டமும் 33 சதவிகித ஜீனியின் சேமிப்பும் போனஸ்.
என் மனைவியிடம் பிள்ளைகளுக்கு காபி சேர்க்கும்போது ஒன்றேமுக்கால் ஸ்பூன் போடு போதும் என்று கூற, அவர்களும் குடித்தார்கள்  எந்த குறையும் சொல்லாமல், சில நாட்கள் கழித்து சிறுகச்சிறுக குறைத்து தற்போது ஒரு ஸ்பூணிர்க்கு வந்துவிட்டது. எந்த விட்டுக்கொடுத்தலும் இல்லாமல் ஒன்றரை ஸ்பூன் சர்க்கரை விட்டுக்கொடித்துவிட்டோம். 

எனக்கு சர்க்கரை நோயின் ஆரம்பம். டாக்டர் நான் முற்றிலும் சர்க்கரையை தவிர்க்க உத்தரவு பிறப்பித்தார் உப்பில்லாப் பண்டம் குப்பையிலே அப்போ சக்கரை  இல்லா பண்டம் சாக்கடையிலா ?  அரை ஸ்பூன் சர்க்கரை போட்ட காப்பி சகிக்கவில்லை மேற் குறிப்பிட்ட கோணத்தில் காப்பியின் அளவைக் குறைத்தேன் அரை ஸ்பூன் அரை டம்ளர். சூப்பர் காப்பி அளவும் குறைந்தது. சர்க்கரை அளவு குறைந்து உடலின் ஆரோக்கியம் நிறைந்தது. இதுபோல் பல விஷயங்கள் பல பெற்றோர்களுக்கு கூறிய சம்பவம் மிக சிறுக சிறுக ஓரளவு குறைக்க முற்பட்டு வெற்றி அடைந்தார்கள். இதை முடிந்த வரைக்கும் பல சம்பவங்களுக்கு உட்படுத்தி பல படிகள் உயரலாம். ஆங்கிலத்தில்  இவைகளுக்கு வியா மீடியா என்று கூறுவார்கள். சாம்பல் கோட்டின் மீது நின்று மேன்மைகளை கீழ்மைகளை சிறுக சிறுக யோசித்தால் காலம் கனிந்து மூன்றாம் கண் திறப்பதை  உணர்ந்து செயல் பட்டால்  தெய்வீகம். சிந்திக்க சிந்திக்க தேவைகள் குறையும். லெஸ் லக்கேஜ் மோர் கம்போர்ட் வாழ்க்கை பயணம் சுகமாக அமையும். "பொண் வைக்கும் இடத்தில் பூ வைத்துப் பார்த்தால்,  இரண்டும் அழகுதான் ஏற்றுக்கொள். "சிறுகக் கட்டிப் பெருக வாழ்"வையகமும் செழிக்கும் உன்னுடன் சேர்ந்து. அன்றாடம் பல செயல்கள் நமக்கு பல சிந்தனைகளை தூண்டுகிறது. உதாரணமாக நம் சமையலில் முழுகடலை சுண்டல் தயாரிக்க முதல் நாள் இரவு அல்லது நான்கு மணி நேரத்திற்கு முன்பு ஊறவைத்து வேகவைத்து சுண்டலை சமைப்போம். என் சிந்தனையில் ஏன் முதல் நாளைக்கு முன்னாலே ஊறவைத்து சிறிது நேரம் கழித்து துணியில் மூட்டை கட்டி வைத்து மறுநாளைக்கு மறுநாள் சுண்டல் தயாரித்தால்  முழு கடலை germinate ஆகி முளைக்கட்டும் ருசி கூடும், எடை கூடும் சத்துக்களும் கூடும் எளிதில் ஜீரணமாகும்,  வேகும் நேரமும் குறையும், எரிபொருள் சேமிப்பு, என்று பல விதங்களில் நமக்கு போனஸ். என்ன செய்தோம் ஒரு நாளைக்கு முன்னாலேயே ஊறவைத்தோம் அவ்வளவுதானே! நம் அன்றாட சமையலில் சில யுத்திகளை கடைப் பிடித்தாலே பொருள், நேரம் ஆரோக்கியம் போன்ற பல மேன்மைகள் போனஸாக கிடைக்கும் அது திட்டமிடுதல் யுத்திகளின் தாக்கம் நம் அன்றாட அலுவல்களிலும் தானாக புகுந்துவிடும். ஆண்களும் சமையல் கலை அறிந்திருந்தால் தன்னம்பிக்கையும் தன்மானமும் உயரும்போது,  ஆண்மைக்கு மேலும் அழகு தற்கால சமையல் உபகரணங்கள் மிக மேன்மையான கண்டுபிடிப்புகளினாள் 
சமையல் கலை கற்று சாதிக்கலாம்.

குறிப்பு :தெய்வீகத்தின் வித்தியாசமான அணுகுமுறை உங்களுக்கு உகந்தது. உகந்ததாய் உணர்ந்தாள் இக்கருத்துக்களை  உற்றார் உறவினர்களிடம் பகிர்ந்து ஆதரவு அளித்தால் மேலும் பல சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள உற்சாகம் ஏற்படும்.