Wednesday, December 29, 2021
ப்ரா(ண)சக்தி பஞ்சாபூதம் (பஞ்சக்க்ஷரம் )
இப்பிரபஞ்சம் ஆகிய பிராண சக்தியின் பஞ்சபூதங்கலாலும் நிறைந்த இந்த அண்டத்தின் கோள்கள் (கிரகங்கள்)தங்கள் ஈர்ப்பும் சில உந்துதலுமாக சுழற்ச்சியில் இயங்குவதும் இயற்கைக்கு ஊறாக செயற்கை கோள்களின் வலைதள அலைகள் நம்மை மனோரீதியாக அலைக்கழிக்க சித்தம் தடுமாறுவதை உணரத்தான் வேண்டும், தற்கால சூழ்நிலையில் மனிதன் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதை உணர்ந்தால் யோக நெறிமுறைகளில் ஆர்வத்தை செலுத்தலாம் 🙏.
Monday, December 6, 2021
சித்த-யோகம்
சித்தயோகா - சிந்தித்து செயல்படுத்தக்கூடிய யோகாஅப்யாஸம், ஒரு
நாணயத்திற்கு எப்படி இருபக்கங்கள் உள்ளதோ அதேபோல் ஒரு செயலுக்கு இரு
அணுகுமுறைகள் உள்ளது. அவைகளை பலகோணங்களில் சிந்தித்து ஆராய்ந்து நமக்கு உகந்தவைகளை தேர்ந்தெடுக்கும் முயற்சி. ஒரே செயலில்
பல வேலைகளை சாதிக்க வேண்டிய எண்ணங்கள். அதற்கு ஏற்ப யுக்திகளை
கையாளும் விதம் பிராணயாமம் செய்யும் போதே தியானமும் தியானத்துடன்
கூடிய யோகாசனமும், யோகாசனத்துடன் கூடிய ப்ராணயாமம், மன உற்சாகம்
உணரும் தன்மைகளை பெருக்கி கொள்ளுதல். (உ.ம்) பலர் கூடி
அமர்ந்திருக்கும் போது சுகந்த மலர் வாசனையை ஒருவர் அறிந்து சொல்ல மற்றவர்கள் அதை பின் உணர்ந்து, ஆமோதித்தல் என்ற அனுபவம் நம்மில் பலருக்கு உண்டு.
செயல்திறனின் மேம்பட்ட சிந்தனைக்கு ஒரு உவமை கதை-
"அணிலின் முதுகினில் மூன்று கோடுகள் உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.
அதற்கு. நம் முன்னோர்கள் கூறும்கதை கம்பராமாயணத்தில் கம்பர் வர்ணித்ததுபோல் திருராமபிரான் இலங்கைக்கு பாலம் அமைக்கும் பணிகளில்
பல வானரப் படைகள் தங்களால் முடிந்த பாறைகளை சுமந்து சென்று கடலில் பாலம் கட்டும் பணியில் ராமபிரான் மேற் கொண்டுள்ள பக்தியினால் உதவி
செய்யும் நோக்கில் தன் உடலினை கடல் நீரில் நனைத்து பின் கரை மணலில் உருண்டு தன் உடலில் உள்ள மணலை பாலம் கட்டும் இடத்தில் உதிர்த்துவிட்டு
வருமாம். இவ்வாறு செய்வதை அறிந்த இராமபிரான் அந்த அணிலை அன்பாகதடவி கொடுத்ததினால் அக்கோடுகள் அமைந்தன என்றார்கள். சித்த
அப்யாசத்தில் இக்கதைக்கு எவ்வாறு சிறப்பூட்டலாம் என்றால், அணில் மேற்கூறியது போல் தன் உடலில் உள்ள மணலை உதிர்த்துவிட்டு வருகையில்
நாம் உண்மையிலேயே ராமபிரானுக்கு உதவி செய்கிறோமா? இந்த சிறுதுளி
மணலினால் பாலம் கட்டும் பணியில் எந்த பலனும் இல்லை. வேறு எவ்வாறு
இப்பணியில் நம்மை ஈடுபடுத்தி செயல்பாட்டினை மேம்படுத்தலாம் என்று சிந்தித்தது. அப்போது அருகில் சில சிறுவர்கள் தான் கொறித்து கீழே போட்ட
கொய்யாபழத்திற்காக போட்டி போடுவதை கண்டது. இச்சிறுவர்கள்
இப்பழத்திற்கு இப்படி போட்டி போடுகிறார்களே! என்று அருகில் உள்ள வானரத்திடம் கேட்டதற்கு அந்த வானரமும் உனக்கு இராமபிரான் அளித்த
சிறப்பு இதுதான் உனக்கு ருசியான பழங்களை வெகு விரைவில் அறியும் சிறப்பை இறைவன் அருளியுள்ளார் என்று வானரங்கள் கூறியது. அணிலும்
இறைவன் அருளிய சிறப்பை கண்டு வியந்தது. ஆனால் இச்சிறப்பு எப்படி
பாலம் கட்ட பயன்படும் என்று யோசித்து ஏன் இப்படி செய்தால் என்ன? நான்
சில வானரங்களை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள வனபகுதிக்குச் சென்று
ராமா நாமாவையும் சொல்லிக்கொண்டே வேகமாக ருசியான பழங்களை தன்
சக்தியினால் கண்டுணர்ந்து கொய்து போட அதை சில வானரங்கள் கொண்டுவந்து கடும் பணியில் ஈடுபட்டிருந்த வானரங்களிடம் கொடுக்க
அதை விரும்பி உண்ண மற்ற வானரங்களின் களைப்பு நீங்கி மிக உற்சாகவும் வேகமாகவும் பாலம் கட்டி முடிக்கப்பட்டதை ராமபிரான் கண்டு வியப்படைந்து அணிலை அருகினில் அழைத்து இப்பெரும் பணிக்கு சிறிய
விலங்கான நீ எவ்வளவு முதன்மையாக இருந்திருக்கிறாய் என்று அகம் மகிழ்ந்து வருடிக்கொடுத்த கோடுகள்தான் அவை. ஆக இப்படி மேம்பட்ட
சிந்தனையின் பொருட்டு நம் பணிகளின் திறன் பல மடங்குகள் கூடும் என்பதில்
ஐயமில்லை. சித்த அப்யாஸனத்தில் ஓர் ஆன்ம சிந்தனை. நம் உடல் வேறு
என்பதற்கு ஒரு பௌதீக உதாரணம். நம் உடல் ஆனது. எலும்பு சதைகளினால்
ஆன ஒரு இயந்திரம் என்று வைத்துக் கொண்டால் உயிர் என்பது அந்த
இயந்திரத்தை இயக்க மின்சக்தி போன்ற பிராணசக்தி தேவை. மோட்டார் ஆனது 160 Volt முதல் 290Volt வரை இயங்கும் தன்மை உள்ளது. ஆனால்
மின் சக்திக்கு ஒப்ப அதன் வேகமும் மாறுபடும். ஆனால் இந்த உடல்
24ம் யக்மோ 220 Volt முதல்240 Volt வரை வேக மாறுபாடுகளுக்கு ஒப்பதான் சீராக
இயங்கும் தன்மையாக உள்ளது. ஆகையால் மோட்டார் போன்ற உயிர் இயங்க
சரியாக கட்டுப்படுத்தப்பட்ட (Stabilized) மின்சக்தியான பிராண சக்த்தியை சரிவர பிரயோகம் செய்வதின் மூலம் மட்டுமே உடல் ஆன இயந்திரம் நோய்
என்ற இடர்பாடுகளில் இருந்து தப்பித்து சரிவர இயங்க செய்வதுதான்
யோகமுறை. பிராணசக்தி திறனை உயிர் உணர்ந்து உடலை இயங்கச்
செய்வதின் மூலம் சித்தம் தெளிவடைந்து மனம் அமைதியை உணர வைப்பதுதான் சித்தயோக அப்யாஸம். எவ்வாறு இயந்திரம் பழுதடைந்த உடன்
மோட்டாரை தக்க வேறு இடத்தில் பொறுத்தி, அந்த உயிர் அற்ற உடலில் இருந்து பிரிந்த ஆத்மா என்கிற உயிர் வேற உடலுடன் இணைக்கப்படுகிறது.
இயற்கையை அழிக்கவோ, ஆக்கவோ மனிதனால் முடியாது. ஒரு பாத்திரத்தின் நீர் சிந்திவிட்டால் அது ஆவி ஆகி மறபடி மழை நீராகி நமக்கு கிடைக்கிறது.
ஒரு மரத்தில் இலை உதிர்ந்து தழை உரமாகி மறுபடி மரமாக வளர்கிறது.
காற்றானது மின் விசிறியால் இடம்மட்டுமே மாற்றப்படுகிறது. இதேபோல்
அனைத்தும் சுழற்சியின் முறையிலேயே நடைபெறுகிறது போல் உயிராகிய
ஆன்மாவும் சுழற்சியின் முறையில் மறு ஜென்மம் பெறுகிறது. மறுபடி ஜனனம்
மறுபடி மரணம், மறுபடி தாயின் வயிரே சரணம்" என்று ஆதி சங்கர்
கூறியது போல் மறுபடி சிறப்பான புனிதத்தாயின் வயிற்றில் சரணம் அடைய
வேண்டும் என்றால், இந்த ஜென்மாவில் புனிதத் திணையை யோக அப்யாஸம்
மூலமாக விதைத்தால் மட்டுமே மறு ஜென்மம் என்ற சொர்க்கமான திணையை
அறுவடை செய்ய முடியும். மேலும் மழை பெய்கிறது நாம் நனையாமல் குடை
பிடித்து சித்த சாதுர்யத்தால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சௌகர்யமாகச்
செல்கிறோமே அதேபோல்தான் ஜீவ ஆத்மாவும் சித்தயோக சாதுர்யத்தால்
மறு ஜென்மம் சுகமாக அமைந்தால் சொர்க்கமாக மாற்றி அமைத்தும் கொள்ள
முடியும்.
Subscribe to:
Posts (Atom)