Monday, March 23, 2020

கானல் நீர் போல காரிகை (பெண்)

"காளையின் கண்களுக்கு காரிகைகள் கானல் நீர்!"
"கண்டு கொள்ள வேண்டி இடைவிடா தொடர் ஓட்டம்!"
"ஓட்டத்தின் ஊடே காணும் பல மேன்மைகளை ஒதுக்கிவிடாமல் உட்படுத்தி காட்டு உன் கனவுகளை!" "இயற்கையில் கண்கவர் காரி கைகளும் உண்டு, 
இறைவன் படைப்பின் பண்பியல் இது."
கனவுகளை நினைவாக்கி நிலைத்து காட்டு உன் வாழ்வில்"
 "களைத்துப் போகையில் காரிகையின் இரு விழிகள் உன்னை கவரும், இயற்கையில் ஒன்றான தென்றல் போல".
"காண்பதை எல்லாம் உனக்கு சொந்தமாக நினைக்காதே 
பந்தம் ஆக்கிக்கொள் உன் உயரிய பண்புகளால்".
" உனக்கென்று ஒருவள் இவ்வையகத்தில் காத்திருப்பாள்.
உவகையுடன் ஏற்றுக்கொள் காலம் கைகூடும் போது!"
"இறைவன் படைப்பின் இனியவள் அவள், 
இயல்பாக அவள் நம் கண்களை கவரதான் செய்வாள். 
"வெற்றிக்கு நீ சிந்தும் வேர்வை துளிகளை ஒற்றிவிடும் தென்றல் போல் அவள் அழகு.
"காசுக்கு  வாங்கும் பொருளின் மேல் வஞ்சியர் உருவம் வண்ணம்  தூவிய குரோட்டன்ஸ் இலை போல்."
"கண்டு ரசிக்க மட்டுமே கடவுளின் படைப்பில் பெண்மை." 
கருமையை பூசிடாதே உன் கற்பனை தீயில். 
"காரிகைக்கு மட்டும் தான் கற்பு நெறி என்று எண்ணாதே, 
கட்டிளம் காளையே உனக்கு தான் அது பொருந்தும்."
"கற்புநெறி தவறாதார்  கந்தர்வர்கள் ஆனார்கள்!" 
"கற்புநெறி தவறியவர்கள் காமுகர் ஆனார்கள்!"
                                                  சு. கி. சாமி 

Thursday, March 19, 2020

வாதம்

எவன் ஒருவன் மற்றொருவனை வாதத்தினால் வென்றுவிடுகிறானோ, அவனிடம் அன்பை இழக்கிறான்.
வாதம் என்பது ரயில் தண்டவாளம் போல் இரண்டும் இணையாது, ஆனால் தண்டவாளத்தில் ரயில் போய்க்கொண்டே இருக்கும். அதுபோல் வாதங்கள் நீண்டுகொண்டே போகும். அதில் அவரவர்களுடைய கருத்துக்கள் பயணிக்கும்.
கலிலியோ -உலகம் உருண்டை என்று தன் அறிவினால் உணர்ந்து அறிவித்தார். அவர் கருத்தை அப்போது ஏற்கவில்லை. துரத்தினார்கள்,  அவர் கருத்துக்கு மரணத்தை பரிசாக அளித்தார்கள்.
சானக்கியன்- இளைஞர்கள் மன வளர்ச்சிக்கு அழித்த தத்துவங்களை தான் முதியவர்கள் ஏற்ற்றார்களா?  முடிவு மரணம். 
இப்படி எக்கருத்துக்களையும்  ஏற்கும் மனோபாவம் ஏன் இல்லை,  நம் மக்களுக்கு கருத்துக்களை எற்பதினால்தான் இழப்பு ஏதும் உண்டா? தன்மானத்தை இழப்பதாக கருதி அவர்கள் ஆண்மை பலத்தினை இழக்கிறார்கள். அறிஞர்களின் அறிவை தூண்டுவதற்கு பதில் அவர்களின் மனதை துண்டு துண்டு  துண்டாக்குகிறார்கள். முளையிலேயே எத்தனை ஆண்மை அறிஞர்கள் இவர்களின் செயல்கலினால்  மனம் வருந்தி மன அழுத்தத்தினால் வெதம்பி நோய்க்கு ஆளாக்கப்படுகிறார்கள்?  இளம் வயதிலேயே மாண்டார்கள். விவேகானந்தர் மரணமும் அப்படித்தானே நோய்க்கு மருந்து உண்ணாமல் விரக்தியின் விளிம்பில் இருந்து வீழுந்து விட்டானே. எக்கருத்தையும் ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் நம் மனம் தானே கேட்ட  கருத்தை உள்வாங்கி வைத்துக்கொண்டு பல கோணங்களில் ஆராய்ந்து நமக்கு உகந்தவை என்று உணர்ந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்போகிறோம். எதற்கு கருத்துக்களை முழுமையாக அறிவதற்கு முன்னரே அவர்களிடம் வாதம் புரிய வேண்டும்! அவர்களின் எண்ண ஓட்டத்திற்கு தடைக்கல்லாகி  அவர்கள் மனதை புண்படுத்த  வேண்டும்! சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழியை உற்று நோக்கினால் அதன் தன்மையினை உணரலாம். 
ஏதோ விருந்தில் உணவு உண்டபின் உணவு துறைக்குள் நம் பற்களின் இடையில் சிக்கி அதை நம் பல்லினால் நெருடியும் எடுக்கப்பட்டு துணுக்குகள் வராமல் அடம் பிடிக்கும் போது, வேறு எந்த என்னத்திற்கும் தடைபடாமல் படும் அவஸ்தையை நாம் எப்பொழுதும் அனுபவித்திருப்போம். அப்போது ஏதாவது சிறு துரும்பும் பல்குத்த ஏதுவாக நம் கையில் கிடைக்கும் போது ஏற்படும் உணர்சிகளை எண்ணிப்பாருங்கள் இப்பழமொழியின் தன்மையை உணரலாம் அப்படி ஏதாவது ஒரு சமயத்தில் இக்கருத்துக்கள் நமக்கு உதவலாம் இல்லையா? நம் கடந்த வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்களில் நம் மனதிற்கு ஏற்புடையாமல் வெறுத்து பின் அதன் ஆழத்தை உணர்ந்த அனுபவம் நம்மில் பலருக்கு உண்டு. என்ன நாம் செய்ய  போவது,  எல்லாம் நம்மை நாடி வரும் கருத்துக்களை பொறுமையாக சில கணம் கேட்பது மட்டும் தானே என்று நினைத்தால் வாதத்திற்கு இடமேது!
"விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவது கிடையாது கெட்டுப் போனவர்கள் விட்டுக் கொடுப்பது கிடையாது"

யோகா (மூச்சு பயிற்சியுடன் )

இனி மூட்டுவலியா மூச்........
 குப்புறப் படுத்துக்கொண்டு தலையை மார்பில் இருந்து மேலே நோக்கி வளைத்து இரண்டு உள்ளங்கைகளிலும் முகத்தின் தாடை அண்டை கொடுத்து நன்றாக மூச்சை உள்ளிழுத்து மிக நிதானமாக வெளிவிட்டுக் கொண்டே காலை மேல் நோக்கி முடியும் வரை நன்றாக மடக்கி பின்பு கீழ்நோக்கி காலை நீட்டவு ம்  பின்பு வலது காலை முடியும் வரை மேல் நோக்கி மடக்கி நீட்டவும் இப்படி மாறி மாறி பத்து இருபது முறை ஓய்வு நேரங்களிலோ அல்லது காலை படுக்கையில் இருந்து எழும் போதும் பின்பு இரவு படுக்கும் முன்பும் செய்து பழகினால் கால் மூட்டுகளுக்கு நல்ல பயிற்சியாக அமையும்.