Friday, January 31, 2020

சாமானியனின் சிந்தனைக்கு

பிள்ளையாரே இந்த பிள்ளை யாரோ
பித்தனாய் பரிதவிக்கும் பிள்ளைக்கு
பக்குவமாய் படைத்திட்டாய் பாங்கான உன் உருவம்
பிராண பொருளை உள்ளிழுக்க உன்
தும்பிக்கை துணை கொண்டு பந்து போல் ஊதினாய் உன் பானை  வைற்றினை பார்த்து பழகினேன் நானும் 
பித்தனாய் இருந்த எனக்கு இத்தனை சுகமா அத்தனைக்கும் உன் உருவம் ஆனந்தம்  ஆனந்தம் !
                                                                         சு.கி சாமி. 


விநாயகரை நினைத்து எந்த ஒரு வேலையையும் துவங்குவது பாரம்பரியம். அப்படி துவங்கினால் விக்கினம் இல்லாமல்  வேலை தடை இன்றி முடியும் என்பது நம்பிக்கை. கோவிலிகோ எந்த ஒரு சடங்கிற்கோ விநாயகரை வழிபட்டு ஆரம்பிக்கிறோம், மேல் கூறிய மிக எளிதான வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட பாமாலையை உற்று கவனித்தால்,  விநாயகரின் உருவம் ஒரு செய்தியினை சொல்ல விளைகிறது அது என்ன? பிராண பொருளை, மூச்சுக்காற்றை வயிற்று வரை உள் இழுத்து வெளியேற்றினால் உடல் வெப்பம் சிறிது தனிந்து, மன அமைதியை உணர்ந்து, சிரத்தை உடன் மற்றக் காரியங்களை முடிக்க எதுவாக இருக்கும். 
       
   பிராணப்பொருள் :

 பிரபஞ்சத்தின்   சக்தியை (cosmic energy) பஞ்ச பூதன்களில் ஒன்றான காற்றில்கலந்து, பஞ்ச பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகாயம் பிரபஞ்ச சக்தியை, பிராண சக்தியாகவும் அதனின் சுருக்கம் பராஸக்தியாகவும்,  பஞ்ச பூதங்களின் சுருக்கம் கூடி பிரபஞ்சம், என யோசித்தால் சக்தி இல்லையேல் சிவன் இல்லை. என்னும் கூற்று நிரூபிக்கின்றது. (காஸ்மிக் எனர்ஜி) பிரியராக பஞ்சபூதங்கள் செயல்படுகிறது. பிரபஞ்சத்தில் சக்தியும் அதற்கு கூறுகளான இயக்கங்களும் சாமானியன் சிந்திக்க தொடங்கியபின் , விரிவாக ஆராய்ந்தால் மனம் தெளிவுடன் தெய்வீகத்தை ஏற்கும் பக்குவம் அடையும். 
                                 பஞ்சகோஷம்    
உபநிஷத்தில் கூறப்படுவது கோஷம். பிராணமய கோஷம், மனோமய கோஷம், விஞ்ஞானமய கோஷம், ஆனந்தமய கோஷம் 
அன்னமய கோஷம்: நம் பிரபஞ் ஸ்ருஷ்டி நாள் தயாரிக்கப்பட்ட உணவு.
 

"விலங்குகள்  உயிர் வாழ உயிரை தேடுகிறது மனிதா நீ உயிர் வாழ உணவை தேடுகிறாய்".
 

உணவை ருசித்து உணர்வை ரசித்ததினால் உன்னுள் கலந்த இறை அவனை தேடுகிறாய். 
 எப்படி உணவு உடலில் கலந்த பின் பிராண மயமான சீர் மூச்சு இயக்கப்பட்டு மனோமய கோஷத்தில் இணைவதன் மூலம் விஞ்ஞான மயம்கோஷமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, வரும் நிலையில் தெளிவு பெற்று சமாதானமான ஆனந்தமய கோஷத்தில் திளைகிறோம்.
 ஒரு சிறுகதையின் மூலம் விளக்குவோம், ஒரு அரசன் ஜோதிடரிடம் தன் பல குறைகளை கூறுகையில் ஜோதிடர் நீ பல யுத்தங்களில் பல உயிர்களை கொண்டிருக்கிறாய் ,அது உன் வர்ண தர்மம். தப்பில்லை, இருந்தாலும் அறிந்தோ அறியாமலோ ஒன்றிரண்டு நல்ல உயிர்களையும் கொண்டிருக்கக் கூடும், அந்த நல்ல ஆத்மாக்களின் சாபம் மூலமாகவும் உனக்கு பல கஷ்டங்கள் நேரலாம், ஆகையால் ஏழை பிராமணர்களுக்கு திருப்தியாக உணவளித்தால் சில கஷ்டங்கள் விலகலாம் என கூறினார். அரசனும் தன் மந்திரியிடம் ஏழை பிராமணனுக்கு உணவளிக்க,  என்று உத்தரவிட்டார் மந்திரியும் எங்கோ அலைந்து கடைசியில் ஒரே ஒரு ஊஞ்ச விருத்தி பிராமணரை (கழுத்தில் சொம்பை மாட்டிக்கொண்டு இறைவன் பாடல்களைப் பாடிக்கொண்டு அரிசியை தானமாக பெற்று உணவருந்தி வாழ்பவர் ) அணுகி ஏய் !பிராமணரே நீர் நாளை அரசர் அளிக்கும் உணவை சாப்பிடவும் அது அரசர் உத்தரவு என கூறவும் அந்த ஏழை அந்தணர் ஐயோ நான் பிச்சை தானியத்தை சமைத்து விட்டு மிச்சத்தை உண்பவன், எனக்கு பர போஜனம் (மற்றவர் சமைத்தது) சரிவராது. எனக்கூற மந்திரி கோபமடைந்து அரசரிடம் இட்டுச்செல்ல,  அரசர் வார்த்தைகளை தட்ட முடியாமல், அரசு வேறு வழியில்லை என்பதால், ஒரு பிராமணரை     
சமைத்து போட  சொல்லுங்கள் உண்கிறேன் எனக்கூற, அந்தணரேஅவருடைய இல்லத்தில் நாளை உண்ணுங்கள் என உத்தரவிட்டார். மறுநாள் மந்திரி அரண்மனையில் பல உயர்ந்த வகை பலகாரங்கள் செய்வதாக தன் குடும்பத்திற்கு வேண்டியவைகளை வாங்கிக்கொண்டு , உணவு பரிமாற தங்கத் தட்டையும் கேட்டு வாங்கி வந்து இந்த பிச்சைக்கார பிராமணனுக்கு அறுசுவை தேவையா? என்று சிறிது சாதமும் மோர் ஊறுகாய் தங்க தட்டில் பரிமாறி உண்ணச் செய்தார். உஞ்சவிரித்தி பிராமணனும் அரச பயத்தில் உணவை உண்டு தட்டை தன் பையில் வைத்துக் கொண்டு சென்றுவிட்டார். இதை கவனிக்காத மந்திரி தட்டை காணாமல் தேடி ,பின் அரசரிடம் அந்த பிராமணர் தட்டை திருடி விட்டார் என்று கூற அனைவரும் அவரை தேடினார்கள். சில மணி நேரம் கழித்து பிராமணர் தன் பையில் கனமான பொருளான தங்க தட்டை கண்டபின் அடடா,  உன்ட வீட்டிற்கு இரண்டகம் செய்து விட்டோமே,  என்று அரசனிடம் திருப்பி கொடுக்க அரண்மனை நோக்கி விரைந்தார் திரும்பி வரும் வழியில் அவரை அரண்மனை ஊழியர்கள் சிறைபிடித்து சென்று,  அரசனிடம் ஒப்படைத்தனர். பிராமணர், அரசே நான் வேண்டுமென்று திருடவில்லை தாங்கள் அளித்த உணவில் சாத்வீகம் இல்லை ஆகையால் தங்கள் உணவு என்னை தூண்டியது. உணவு ஜீரணமான பின் என் நிலையை உணர்ந்து தங்களிடம் ஒப்படைக்கும் எண்ணத்தில் திரும்பி வரும் வழியில் தான் தங்கள் ஊழியர்கள் என்னை சிறைபிடித்தனர். வேண்டும் என்று சிலருக்கு போஜனம் அளித்துத் சோதனையை முயற்சி பார்க்கலாம். என்று அன்னத்தின் சிறப்பினை எடுத்துரைத்து. பரீட்சித்துப் பார்த்ததில், அரசர் உண்மையை அறிந்து பிராமணரை விடுவித்தார். 

புராணத்தில் பூமியில் இருந்து விலகிய பலவிதமான ஆத்மாக்கள் தேவலோக தீர்ப்பின் பிரகாரம் மரு பிறப்பிற்காக ஆவியாக (நீராவி) மழையில் கலந்து பூமியில் நவதானிய வேரில் தஞ்சமடைந்து,  நமது உடலில் கலந்து, பிறவி எடுக்கிறார்கள். அவ்  உணவினை பிராமணர்கள் பரிஷேசனம் செய்தும்,  மற்றவர்கள் பிரார்த்தித்தும்,  உன்பது நாள் நம் கெட்ட எண்ணங்கள் வீரியம் குறைந்து,  உணர்வு திறன் உயர்ந்து சில மணிநேரங்கள் நம்மை ஆட் கொள்வதை கூட தெய்வீகமாக உணரலாம்.

சாத்வீக உணவு : மேன்மையான உணர்வுடன் சமைத்து உண்பதால் பிரசாதமாக உடலில் கலந்து பிராணமய கோஷத்தை உயர்த்துவதால் அன்னமய கோஷம்  முழுவதும் நம் கையில். பிராணமய கோஷம் அன்னத்தை சார்ந்ததால் ஓரளவு நம் கையில் இவையிரண்டையும் கையாளும் முறையில் தான் மனோமய கோஷத்தில் தன்மையினால் விஞ்ஞானமய கோஷம் ஆராய்ச்சிகள் அமைந்து அதில் தெளிவடைந்து ஆனந்தமய கோஷம் அடைய முடிகிறது. 

எதற்கும் எதிர்வினை உண்டு, என்பது  நியூட்டனின் மூன்றாவது சூத்திரம். வினைக்கு வினைப்பயன் மட்டும் பொறுப்பல்ல, வினையை எப்படி மேற்கொள்ளவேண்டும், என்ற சிந்தனை பயன் மேம்படுகிறது. மதில்மேல் பூனை போல், நான் கடி மதில் சுவரில் ஒருவன் நிற்கின்றான் ஒரு பக்கம் இரண்டு அடி தண்ணீர், மறுபக்கம் இலவம் பஞ்சு எந்த பக்கம் குதித்தாலும் பாதகமில்லை. மூன்று கண்ணாக கோடைகாலமாக இருந்தால் தண்ணீரில் குதிப்பது, குளிர் காலமாக இருந்தால் பஞ்சு நூலில்  குதிப்பது சுகம்தானே. அந்த சுகம் தான் தெய்வீக சிந்தனையின் போனஸ். எந்த ஒரு காரியத்தையும் சாதிப்பதை விடவும் ஆனந்தம் மேம்பட்டது. மேற்கூறிய சம்பவம் மனோமயமும், விஞ்ஞானமயமும் சேர்ந்தது அளித்த போனஸ் தான் ஆனந்தமயம். 
 பஞ்ச கோஷத்தில் அன்னமயகோசம் முழுமையாகவும் பிராணமய கோசத்தில் பாதி யையும் மட்டுமே நம்மால் கையாள கூடியது
 மற்ற மூன்றரை கோஷம் இவைகளால் நிர்மாணிக்கப்பட்டது. ஐந்தில் மூன்றை போனஸ்.

முன் குறிப்பிட்ட மூன்றாம் கண்

God is not a known it is the verb we are always thinking best and worst in the form of two colour black and white the meaning of two colour is nothing bur grey we all taking our decision become sucess then it is divine 

 சாமி என்பது பெயர்ச்சொல் அல்ல வினைச்சொல் எப்பொழுதும் நாம் சிந்திக்கும் மேன்மைகளை கீழ்மைகளைளை இரு வண்ணங்களாக கொண்டால் கருமை வெண்மை இந்த இரு வண்ணங்களில் சந்திப்பே சாம்பல் கோடு சாம்பல் கோட்டின் மீது எடுக்கும் தீர்மானங்கள் வெற்றியில் அமைந்தால் அதுவே தெய்வீகம்.